Blogger இயக்குவது.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

பெண்ணே புது அத்தியாயம் படை...


சில்லறை காசுக்காகவும்
    சிகப்பு தோலுக்காகவும்
அலையும் ஆடவன் மீது
   சீறிப் பாய இன்னும் ஏன் தாமதம்?


பெண்ணிணம் அடிமையினமா....?
     அடிமைத்துவம் அழிந்தது
அண்ணலின் வருகையால்
    உன் உரிமைக்காகப்
போராட இன்னும் ஏன் தாமதம்




பாலை வனம் பறந்து
    நேசித்த உறவையும்
நேசிக்கும் உறவையும்
    பிரிந்து பணம் படைக்கிறாய்
அவன் பருவ பசிக்கு...


நீ பகடைக் காயாவதை
     பகுத்தறிவால் பகுத்தறிய
இன்னும் ஏன் தாமதம்...?


 பெண்ணே...
 நீ காசு கொடுத்து
தாயாவதா...?
 பூப் போன்றவள்...
புதுமைகள் புரிதலில் பெண்ணினம்
 துளிர்க்கும் என்றால்
இன்னும் ஏன் தாமதம்...?


அல்லாஹ்
உனக்களிக்க சொன்ன
உரிமைகளை கேட்க
இன்னும் ஏன் தாமதம்?
உன் உரிமை
மஹர் அதைக் கேள்!
ஆடவர் மகர் தந்து
மணக் கட்டும்?
புது அத்தியாயம் பிறக்கட்டும்...

Tanks To YASS kky


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger Widgets