Blogger இயக்குவது.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

சகோதரி றிசான நபீக்கின் விடுதலைக்காக ஒரு கையெழுத்து போடுவோமா..?

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
மூதூர் பணிப்பெண் ரிசானா நபீக்கை விடுதலை செய்ய கோரும் மேலும் ஒரு நடவடிக்கையை மேற்கொள்ள ஆசிய மனித உரிமை ஆணையகம் தீர்மானித்துள்ளது. இது குறித்த கோரிக்கை மனுவொன்றினை சவூதி அரேபிய மன்னருக்கு, அனுப்ப ஆணையகம் தீர்மானித்துள்ளது.

மூதூர் பணிப்பெண் ரிசானா நபீக்கின் விடுதலை குறித்து ஈடுபாட்டை காட்டும் பொது மக்கள் சவுதி அரேபிய மன்னருக்கு அனுப்பும் கோரிக்கையில் தமது கையொப்பங்களினை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிசானா நபீக் 17 வயதாக இருந்த காலப்பகுதியிலேயே இவருக்கு எதிராக கொலை குற்றம் சுமத்தப்பட்டது. அப்போது, அவருக்கு சவுதி அரோபிய மொழியில் அதிகளவிலான பரீட்யம் இருந்திருக்கவில்லை.



தற்போது, அவர் பல வருட காலங்களாக சிறையில் இருந்து வருவதனால் அந்த மொழியினை சரளமாக உபயோகிக்கும் திறனை கொண்டுள்ளார்.

இந்தநிலையில், நடந்த சம்பவம் குறித்து விசாரணையாளர்களுக்கு உரிய முறையில் அவர் விளக்க கூடிய நிலையில் உள்ளதாக ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனடிப்படையிலேயே ஆசிய மனித உரிமை ஆணையகம் சர்வதேச ரீதியாக பொது மக்களின் கையொப்த்தை பெற்று உரிய தரப்பினருக்கு அனுப்ப தீர்மானித்துள்ளது.

இந்த விடயம் குறித்து ஈடுபாட்டை காட்டுபவர்களிடமிருந்து கையொப்பங்களை பெற்று அனுப்ப ஆணையகம் தீர்மானித்துள்ளது.

கையெழுத்து போட இங்கு அழுத்துங்கள்..!

http://www.humanrights.asia/news/press-releases/AHRC-PRL-041-2012

http://www.change.org/en-GB/petitions/stop-the-execution-of-rizana-nafeek-in-saudi-arabia

நன்றி Kattankudy News1st 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

2 கருத்துகள்:

Mohamed Shaheed சொன்னது…

Bro, For what purpose she was arrested?

agm farhan சொன்னது…

shaheed bro இளம் வயது பணிப்பெண்ணாக சென்ற இவர் குழந்தை ஒன்றிற்கு பல் கொடுக்கும் போது குழந்தை இறந்து உள்ளது
இதனால் இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது இவர் மிக இளம் பணிப்பெண் என்பதால் சென்ற ஆண்டுகளில் இருந்து பல மனித உரிமை அமைப்புக்கள் இவரின் தண்டனையை குறைப்பதற்காக போராடி வருகின்றன அதில் ஒரு அங்கமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுக்கொண்டு உள்ளது

கருத்துரையிடுக

Blogger Widgets