Blogger இயக்குவது.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

மனித மூளை ,மனித நரம்பு மண்டலத்தின் தலைமையானதும்,
மனித உறுப்புகளில் சிக்கலானதுமாகும் 

மனித மூளை விழிப்புணர்வு இன்றியும் இயங்கும் இச்சை இன்றிய செயற்பாடுகளான   மூச்சு விடுதல் ,செரிமானம், இதயத்துடிப்பு,கொட்டாவி விடுதல் போன்ற செயற்பாடுகளையும் 
விழிப்புணர்வுடன் நிகழும் சிந்தனைபுரிதல் , ஏரணம் போன்ற சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளையும்
கட்டுப்படுத்திகிறது இதில் மூளையை பாதிக்கும் விசயங்களும் இருக்கின்றன.

காலை உணவு

காலை உணவு உண்ணாமல் இருப்பதன் மூலம் இரத்தத்தில் குறைவான அளவே சக்கரை இருக்கும் இது மூளைக்கு தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துகளையும் கொடுக்காமல் ஆக்கி மூளை அழிவுக்கு காரணமாகிவிடும்.

அதிகமாக சாப்பிடுவது 

மிக அதிகமாக சாப்பிடுவதன் மூலம் இரத்தநாளங்கள் இறுகி மூளையின் சக்தி குறைந்து போகின்றது.

புகைப் பிடித்தல் 

புகைப் பிடிப்பதால் மூளை சுருக்கமும் அல்சைமர்ஸ் வியாதி வருவதற்க்கு காரணமாகிறது.

சக்கரை சாப்பிடுதல் 

நிறைய சக்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதை தடுக்கின்றது. இதுவும் மூளை வளர்ச்சிக்குப் பாதிப்பாகின்ற்றது. 

சுவாசித்தல்

மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல் ,நமக்கு தேவையான ஆக்சிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கின்றது.மூளைக்கு ஆக்சிஜன் செல்லாவிட்டால் மூளை பாதிப்படையும்.

தூக்கமின்மை 

நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும் . வெகுகாலமாக தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும். 

போர்வையால் மூடிக்கொண்டு தூங்குவது 

தலையை மூடிக்கொண்டு தூங்குவது போர்வைக்குள் கரியமில வாயு அதிகரிக்க வைக்கின்றது. இது நீங்கள் சுவாசிக்கின்ற ஆக்ஸிஜனைக் குறைகின்றது குறைவான ஆக்சிஜன் மூளையை பாதிக்கின்றது.

நோயுற்ற காலம் 

நோயுற்ற காலத்தில் மூளைக்கு மிக அதிகமாக வேலை கொடுப்பதும்,  
தீவிரமாக படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியான  பின்பு மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

மூளைக்கு வேலை 

மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேட்கொள்ளாமல் இருப்பது, மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும்  சிந்தனைகளை மேட்கொல்லுவதால் மூலையில் புதுப் புது இணைப்புகள் உருவாகின்றது அதனால் மூளை வலிமையான உறுப்பாக மாறுகின்றது.

பேசாமல் இருப்பது 

அறிவு பூர்வமான உரையாடல்களை மேட் கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கின்றது.

உங்கள் மூளையை இனி நன்றாக பாதுகாத்துக்கொள்ளுங்கள்  

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger Widgets