Blogger இயக்குவது.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

நபி[ஸல்]வழி மருத்துவம்!

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டும் 
MARHUM-MUSLIMஎனும் இணையதளத்தில் இருந்து நபி[ஸல்]வழி மருத்துவம்!  எனும் தலைப்பில் ஒரு அருமையான ஆக்கம் ஒன்றைப் படித்தேன் அதை நன்றியுடன் மீள் பதிப்பு செய்கின்றேன்   



ஜவ்வரிசி


சாதாரண ஜுரத்தைப் போக்க ஆங்கில மருந்துகளும், ஊசிகளும் குத்திக்கொள்ளும் முறை நம் பழக்கத்தில் வந்து விட்டது. ஆனால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் குடும்பத்தில் யாருக்காவது ஜுரம் ஏற்பட்டால் அவர்களுக்கு பார்லி அரிசிக் கஞ்சியைத்தான் தருவார்கள் என்று ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறியுள்ளார்கள். இறைவேதங்களான தவாரத், ஜபூர், இஞ்சீல் ஆகியவைகளில்கூட ஜவ்வரிசியை பற்றி 21 இடங்களில் சொல்லப்பட்டு உள்ளது.



இஸ்லாம் தோன்றிய காலத்தில், அரபு நாட்டில் மக்கள் நிம்மதி இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தார்கள். நோய்களால் பலர் பலவீனமடைந்திருந்தார்கள். அவர்களுக்கு நிவாரணியாக ''ஜவ்'' என்னும் பார்லி அரிசி அமைந்தது. இதை ஜவ்வரிசி என்று அழைப்பார்கள்.
பார்லி ரொட்டியுடன் சுரைக்காய், இறைச்சிக் குழம்பு சேர்த்து சாப்பிடுவது என்றால் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மிகவும் பிடித்தமானது என்று புகாரி, முஸ்லிம் ஹதீஸ் உறுதிப்படுத்துகின்றது. பார்லி ரொட்டிக்கு குழம்பாக பேரீச்சம் பழத்தைச் சேர்த்து பெருமானார் அவர்கள் சாப்பிட்டதாக அபூதாவூத் ஹதீஸ் கூறுகிறது.
பார்லி அரிசியை இடித்து அதைப் பாலில் கொதிக்க வைத்து, சுவைக்காக தேன் கலந்த ஒருவிதமான கஞ்சியை பெருமானார் வீட்டில் சமைப்பார்கள். இதற்கு அரபு மொழியில் ''தல்வீணா'' என்று பெயர். வீட்டில் யாராவது உடல் நலமின்றி இருந்தால் அவர்கள் பூரண குணம் பெறும்வரை ''தல்வீனா'' கஞ்சி தயாரித்துக் கொடுத்துக் கொண்டே இருப்பார்களாம்.


சிலரின் மரணத்தால் குடும்பத்தினருக்கு ஏற்படும் துக்கம், கவலை, அதிர்ச்சி, சோர்வு, பயம், கோழைத்தனம் நீங்கி தைரியத்தை உண்டாக்க ''தல்வீனா'' கஞ்சியைக் குடிக்க பெருமானார் அவர்கள் கூறி இருக்கின்றார்கள்.
முகத்தைத் தண்ணீரால் கழுவினால் எப்படி சுத்தமாகிறதோ அதேபோல் ''தல்வீனா கஞ்சி'' வயிற்றைச் சுத்தம் செய்கிறது என்று பெருமானார் கூறியதை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.
போர்க்காலத்தில் அரபு ராணுவ வீரர்கள் பார்லியையும், பேரீச்சம்பழங்களையும் உடன் கொண்டு செல்வார்கள். அதைச் சாப்பிடுவதால் உடலுக்கு உடனடி ஊட்டச் சத்தும், புத்துணர்வும் கிடைக்கின்றது என்று அரேபியர்கள் கூறுகின்றனர்.
ஒரு பங்கு பார்லி, ஐந்து பங்கு தண்ணீர் ஆகிய இரண்டையும் கொதிக்க வைத்து அது கால் பாகமாகச் சுண்டிய பின் பயன்படுத்தலாம் என்று இப்னு கய்யூம் ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறியிருக்கிறார்கள். சாதாரண ஜுரத்தைப் போக்க ஆங்கில மருந்துகளும், ஊசிகளும் குத்திக்கொள்ளும் முறை நம் பழக்கத்தில் வந்து விட்டது.
ஆனால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் குடும்பத்தில் யாருக்காவது ஜுரம் ஏற்பட்டால் அவர்களுக்கு பார்லி அரிசிக் கஞ்சியைத்தான் தருவார்கள் என்று ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறியுள்ளதை ஜாதுல்மாத் ஹதீஸ் உறுதிப்படுத்துகிறது. இறைவேதங்களான தவாரத். இஞ்சீல் ஜபூர் ஆகியவைகளில் ஜவ்வரிசியை பற்றி 21 இடங்களில் சொல்லப்பட்டு உள்ளது.
யுனானி மருத்துவம்
ஒரு பங்கு ஜவ்வரிசியை 15 பங்கு தண்ணீரில் கொதிக்க வைத்து அது மூன்றில் ஒரு பாகம் சுண்டிய பிறகு குடித்தால் சுமார் 100 வியாதிகள் குணமாகும். என்று ஃபிர்தௌஸ் ஹிக்மத் என்னும் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.
பார்லி நீரைக் குடிப்பதால் தொப்பை குறையும். இதன் மாவைப் பிசைந்து மோருடன் குடித்தால் பித்த வாந்தி, தண்ணீர்த்தாகம், நெஞ்செரிச்சல் ஆகியன குணமாகும். தலைப் பொடுகு, சொறி, சிரங்கு ஆகியவை குணமாக பார்லி அரிசி மாவைக் காடியில் கலந்து பூசலாம். மூட்டுவலி, நரம்புவலி குணமாக பார்லி அரிசி யுடன் வில்வப் பழத்தோலைச் சேர்த்து காயில் அரைத்துப் பாதிக்கப்பட்ட இடத்தில் பூசலாம்.




  






ஜவ்வரிசி பாயாசம் :  


ஜவ்வரிசி - 200 கிராம்
வெல்லம் - 250 கிராம்
தேங்காய் - 2 மூடி
முந்திரி பருப்பு - 50 கிராம்
ஏலக்காய் - 5 கிராம்
செய்முறை :


அடுப்பில் கொதிக்கும் வெண்ணீர் வைத்து, அதில் ஜவ்வரிசியை போட்டு கைவிடாம கிளறுங்க.
ஜவ்வரிசி வெந்ததும் வெல்லத்தை சேர்க்கவும்.
பாயசம், பாகு வாசனை வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி,தேங்காய் பாலை அதில் சேர்த்து கிளறுங்க.
நெய்யில் முந்திரி, ஏலக்காய் வறுத்து பாயசத்தில் போட்டு, சூடாக பரிமாறுங்க.


  ஜவ்வரிசி உப்புமா : 




















தேவையானவை :
ஜவ்வரிசி 1 - 2 கிலோ
வெங்காயம் - 100 கிராம்
உருளைக்கிழங்கு _ 4 கிலோ அல்லது
ஆல்வள்ளி கிழங்கு
உப்பு - தேவையானது
செய்முறை :


கடலைப் பருப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை கொஞ்சம், கிழங்கு அல்லது ஆல் வள்ளியை வேக வைத்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மூன்றையும் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து கடுகு, கடலைப் பருப்பு தாளித்து வெங்காயத்தையும் வதக்கி ஊறவைத்த ஜவ்வரிசியையும், கிழங்கையும் போட்டு (தேவைக்கேற்ற தண்ணீர்) வேக வைத்து இறக்கவும்.
பொல, பொலவென்று உதிர்ந்ததும் இறக்கவும்.


நன்றி MARHUM-MUSLIM.com

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger Widgets